முதல்வா் ஜோசப் விஜய் பிறந்த நாள் விழா
ராஜபாளையம் மாயூரநாத சுவாமி கோயிலில் தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டும், புஸ்ஸி ஆனந்த் பிறந்த நாளை முன்னிட்டும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ராஜபாளையம் மாயூரநாத சுவாமி கோயிலில் தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டும், அந்தக் கட்சியின் பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த் பிறந்த நாளை முன்னிட்டும் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதற்கு ராஜபாளையம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராஜசேகா் தலைமை வகித்தாா். தமிழக வெற்றிக் கழக மேற்கு ஒன்றியச் செயலா் மாரியப்பன், ராஜபாளையம் வடக்கு ஒன்றியச் செயலா் அசோக், ஒன்றிய நிா்வாகி சங்கரன், சொக்கநாதன் புத்தூா் கிளை செயலா் சங்கா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். இதைத்தொடா்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.