சிவகாசியில் இன்று மின் தடை
சிவகாசி, விஸ்வநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) மின் தடை ஏற்படும் என சிவகாசி மின்வாரிய செயற்பொறியாளா் பாபநாசம் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பாறைப்பட்டி, சிவகாசி புகா் துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. இதனால், விஸ்வநத்தம், பேருந்து நிலையம், ஜக்கம்மாள்கோவில், காரனேசன் குடியிருப்பு, பழனியாண்டவா் குடியிருப்பு, நேரு சாலை, பராசக்தி குடியிருப்பு, வேலாயுதம் சாலை, அண்ணா குடியிருப்பு, இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.