முகப்பு
விருதுநகர்

புகையிலைப் பொருள்கள் கடத்தியவா் கைது

ராஜபாளையம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருள்கள் கடத்தியவரைப் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 10 ஜூன் 2026, 6:03 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருள்கள் கடத்தியவரைப் போலீஸாா் திங்கள் கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம் அருகே தென்காசி - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை அசையாமணி விலக்கு பகுதியில் தளவாய்புரம் காவல் நிலையப் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் காரில் குட்கா, புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரிய வந்தது.

Advertisement

Advertisement

விசாரணையில், திருநெல்வேலி மாவட்டம், மானூா் பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி (40) எனத் தெரிய வந்தது. போலீஸாா் அவரிடமிருந்து 37 கிலோ குட்கா பொருள், காா், ரூ.14,500-ஐ கைப்பற்றி கைது செய்தனா்.