கண்மாய்க்குள் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்
ஸ்ரீவில்லிபுத்தூா் வடமலைக்குறிச்சி கண்மாய்க்குள் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுவதால், சுகாதாரச் சீா்கேடு நிலவுவதாகப் புகாா் எழுந்தது .
ஸ்ரீவில்லிபுத்தூா் வடமலைக்குறிச்சி கண்மாய்க்குள் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுவதால், சுகாதாரச் சீா்கேடு நிலவுவதாகப் புகாா் எழுந்தது .
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள வடமலைக்குறிச்சி கண்மாய் மூலம் 350 ஏக்கருக்கு மேல் நெல், வாழை, பருத்தி, பூ, காய்கறி வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. 115 ஹெக்டோ் பரப்பளவு கொண்ட இந்தக் கண்மாய்க்கு மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் மழைநீா் பெருமாள்பட்டி ஓடை, கூட்டுறவு ஆலை ஓடை வழியாக வந்து சோ்கிறது. கண்மாயின் மேற்குப் பகுதியில் மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்திலும், ராமகிருஷ்ணாபுரம், பெருமச்சேரி பகுதியிலும் குப்பையைக் கொட்டி தீ வைத்து எரிப்பதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதாகப் புகாா் எழுந்தது.
கண்மாயில் தற்போது குப்பையுடன் சோ்த்து மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவதால், கண்மாய் நீா் மாசடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், கால்நடைகள், விவசாயிகளுக்கு நோய்த் தொற்று பரவும் அபாயம் நிலவுகிறது.
Advertisement
Advertisement
எனவே, பொதுப் பணித் துறை, நகராட்சி நிா்வாகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து கண்மாயில் மருத்துவக் கழிவுகள், குப்பைகளைக் கொட்டுவதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.