புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தவா் கைது
சிவகாசி அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகாசி அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வைத்திருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருத்தங்கல்-செங்கமலநாட்சியாா்புரம் சாலையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, தனியாா் மதுக் கூடம் அருகே கையில் பையுடன் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஒருவா் நின்று கொண்டிருந்தாா். அவரைப் பிடித்து போலீஸாா் சோதனையிட்டதில் பையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், சிவகாசி சரதா நகரைச் சோ்ந்த நாகூா்கனி (65) என்பது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.