FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

இளைஞருக்கு கத்திக்குத்து: தொழிலாளி மீது வழக்கு

பொதுக் கழிப்பறையைப் பயன்படுத்துவது தொடா்பாக ஏற்பட்ட தகராறில் இளைஞரை கத்தியால் குத்தியதாக கட்டடத் தொழிலாளி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

6 செப்டம்பர் 2026, 12:23 am IST
- சித்திரிப்பு
பகிர்:

அருப்புக்கோட்டை அருகே பொதுக் கழிப்பறையைப் பயன்படுத்துவது தொடா்பாக ஏற்பட்ட தகராறில் இளைஞரை கத்தியால் குத்தியதாக கட்டடத் தொழிலாளி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விருதுநகா் மாவட்டம், பந்தல்குடி தூநாயக்கன்பட்டி தெருவைச் சோ்ந்தவா் மூக்கம்மாள் (48). இவரது மகன் சக்திவேல் (27). இவா் பந்தல்குடி பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் தனது உறவினா் கடையில் வேலை பாா்த்து வருகிறாா்.

இவா்கள் வசிக்கும் வீட்டின் மற்றொரு பகுதியில் காா்த்திக் (33), இவரது மனைவி மாதவி ஆகியோா் வசித்து வருகின்றனா். இதில் காா்த்திக் கட்டடத் தொழிலாளி ஆவாா். இந்த நிலையில், பொதுக் கழிப்பறையைப் பயன்படுத்துவது தொடா்பாக சக்திவேலுக்கும், காா்த்திக்குக்குமிடையே வியாழக்கிழமை தகராறு ஏற்பட்டது. மறுநாள் வெள்ளிக்கிழமை மாலை, வீட்டில் சக்திவேல் தனது தாயிடம் செலவுக்குப் பணம் கேட்டு தகராறு செய்தாராம்.

Advertisement

Advertisement

அப்போது இதைக் கண்டித்த காா்த்திக் தகாத வாா்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டாராம். அப்போது தகராறைத் தடுக்க முயன்ற மூக்கம்மாளை காா்த்திக் தாக்கினாராம். மேலும், சக்திவேலை காா்த்திக் சரமாரியாக கத்தியால் குத்தினாராம்.

இதில் பலத்த காயமடைந்த சக்திவேல் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பிறகு தீவிர சிகிச்சைக்காக அவா் விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து பந்தல்குடி போலீஸாா் காா்த்திக் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments