பெரிய மாலை
ஒரு சமயம் கிருபானந்த வாரியாரும் அறநிலைத் துறை ஆணையராக இருந்த டி.எம்.நாராயணசாமிப் பிள்ளையும் ரயில் பிரயாணம் செய்தனர். அப்போது ""பிள்ளை அவர்களுக்கு ஒரு அட்வைஸ்'' என்றார் வாரியார். ""என்ன?'' என்று கேட்டா
ஒரு சமயம் கிருபானந்த வாரியாரும் அறநிலைத் துறை ஆணையராக இருந்த டி.எம்.நாராயணசாமிப் பிள்ளையும் ரயில் பிரயாணம் செய்தனர். அப்போது ""பிள்ளை அவர்களுக்கு ஒரு அட்வைஸ்'' என்றார் வாரியார். ""என்ன?'' என்று கேட்டார் பிள்ளை.
""எவன் பெரிய மாலையைக் கட்டிக்கொண்டு வந்து போடுகிறானோ அவன் கோயில் சொத்தைத் திருடுகிறவன். உங்களுக்குப் பெரிய மாலை அணிவித்து உபசாரம் பண்ணினான் என்றால் அந்தப் பணத்தை எந்தக் கணக்கில் எழுதுவான்?'' என்றார் வாரியார்.