மவுசு குறையாத மரக்கரி!
எரிவாயு அடுப்புகள் பரவலாகப் புழக்கத்துக்கு வராதபோது, கிராமங்களில் விறகு அடுப்புகள் இருந்தன.
எரிவாயு அடுப்புகள் பரவலாகப் புழக்கத்துக்கு வராதபோது, கிராமங்களில் விறகு அடுப்புகள் இருந்தன. அதனால் கோடைக் காலங்களிலும் மரங்கள் வெட்டப்படும்போது விறகுகளை மக்கள் சேகரிப்பர். நாளடைவில் எரிவாயு அடுப்புகள் புழக்கத்துக்கு வந்து, இன்று விறகு அடுப்புகள் அரிதாகிவிட்டன.
தற்போதெல்லாம் வேளாண் நிலங்களிலும், நிலத்தின் ஓரப்பகுதிகளிலும் வளர்ந்திருக்கும் மரங்களை சொந்த தேவைக்கும், வருமான நோக்கில் விற்பனை செய்யும்போதும் அதன் வேர்ப்பகுதியைத் தோண்டி எடுப்பதில்லை. சிறிய இயந்திரங்களைக் கொண்டு தரைமட்ட அளவுக்கு மரங்களை வெட்டுகின்றனர்.
இருளர் இன மக்கள் இன்று வேளாண்மை, கால்நடை வளர்ப்பு என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டாலும் மரக்கரி தயாரிப்பதையும் பிரதான தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்டம், புதுவேட்டக்குடி எனும் கிராமத்தைச் சேர்ந்த இருளர் இன இளைஞர் பாலு கூறியது:
'மழைக்காலங்களில் கோழிப்பண்ணைகளில் உள்ள கோழிகளுக்கு வெப்பத்தைக் கொடுப்பதற்காகவும், டீக் கடைகளுக்காகவும் சேலம், நாமக்கல் போன்ற மாவட்டங்களிலிருந்து வந்து வியாபாரிகள் மரக்கரியை வாங்கிச் செல்கின்றனர். சிலிண்டர் விலை உயர்ந்து மரக்கரியின் தேவை அதிகரித்தாலும் கூட விலை உயரவில்லை. கடந்த ஆண்டு ஒரு மூட்டை 500 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இப்போது 600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மரக்கரியில் எப்போதும் பெரிய அளவில் விலையில் மாற்றம் இருப்பதில்லை. பெரும்பாலும் ஏரிகள், ஓடைகளில் உள்ள மரங்களை வெட்டி கரி மூட்டம் போட்டாலும், சில நேரங்களில் விலைக்கு வாங்க வேண்டியும் உள்ளது. மரங்களின் மற்ற பாகங்களைக் காட்டிலும் வேர்ப்பகுதியே கரி மூட்டம் போடுவதற்கு ஏதுவானதாக இருக்கும்' என்கிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.