FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பேல்பூரி

மனிதனின் பாதி வாழ்க்கை போனிலும், மீதி வாழ்க்கை லோனிலும் கழிகிறது.

5 செப்டம்பர் 2026, 6:45 pm IST
பகிர்:

கண்டது...

(திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு அருகில் உள்ள ஒரு நகரின் பெயர்)

'கணவன்-மனைவி நகர்.'

Advertisement

Advertisement

-வீ.இரா.இராசராசன், செங்குறிச்சி.

(நெல்லை களக்காடு பெல்ஜியம் ஆஸ்பத்திரியில் வாசலில் எழுதி வைத்திருக்கும் வாசகம்)

'இந்தியாவுக்கு வந்தாரு வாஸ்கோடகாமா...

நீங்க ஆஸ்பத்திரிக்கு மாஸ்க்கோட வாமா!'

-ராஜேஸ்வரி சுப்பிரமணியன், நெல்லை.

(திருவள்ளூரில் ஆட்டோ ஒன்றில் கண்ட வாசகம்)

'வாழ்க்கைத் திருப்பங்களில் கவனம்...

வஞ்சகர்கள் அதிகம்!'

-ஏ. மூர்த்தி, புல்லரம்பாக்கம்.

(கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே கால் டாக்சி ஒன்றில் கண்ட வாசகம்)

'அதிவேகம் ஆம்புலன்சுக்கு வழிவகுக்கும்...

மிதவேகம் சேருமிடம் சேர்க்கும்!'

-ஸ்ரீனிவாச பிரபு, கோவை.

(நெல்லையில் ஆட்டோ ஒன்றில் கண்ட வாசகம்)

'மனிதனின் பாதி வாழ்க்கை போனிலும், மீதி வாழ்க்கை லோனிலும் கழிகிறது.'

-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.

எஸ்.எம்.எஸ்.

'பணத்துக்காக வரும் அன்பு செலவாகும் வரை...

தேவைக்காக வரும் அன்பு காரியம் முடியும் வரை!'

-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

யோசிக்கிறாங்கப்பா...

'குழப்பம் என்பது பிறரால் வந்தாலும்...

தெளிவு என்பது உன்னிடமே இருக்கவேண்டும்.'

-த.பாலசுப்பிரமணியன், கோவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments