FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சமையல் டிப்ஸ்....

கோதுமை மாவில் கொஞ்சம் வேர்க்கடலை மாவைக் கலந்து பூரி, சப்பாத்தி செய்தால் ருசி அதிகமாக இருப்பதுடன் உடலுக்கு வலிமையும் ஆகும்.

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:

• கோதுமை மாவில் கொஞ்சம் வேர்க்கடலை மாவைக் கலந்து பூரி, சப்பாத்தி செய்தால் ருசி அதிகமாக இருப்பதுடன் உடலுக்கு வலிமையும் ஆகும்.

• சாப்பிட முடியாத அளவுக்கு வாழைப்பழங்கள் கொழகொழவென்று கனிந்திருக்கிறதா? தோலை உரித்து பழத்தை கோதுமை மாவுடன் சேர்த்துப் பிசைந்து இனிப்பு சாப்பாத்திகளோ, இனிப்பு பூரிகளோ தயார் செய்யலாம்.

• ஒரு கப் பச்சரிசிக்கு அரை கப் உளுந்து சேர்த்து சுடுநீரில் ஊற வைக்கவும். பின்னர், அதை நைஸ் மாவாக அரைத்து இட்லி செய்து பாருங்கள். சாஃப்ட்டாகவும், ருசியாகவும் இருக்கும்.

Advertisement

Advertisement

• கடலைப்பருப்பு, தனியா தலா ஒரு தேக்கரண்டி, நான்கு காய்ந்த மிளகாய் வெறும் வாணலியில் வறுத்துப் பொடிசெய்து கொள்ளவும். இந்தப் பொடியை சேவை, இடியாப்பம் செய்யும்போது அதன் மீது தூவி பின்னர் உப்பு, தாளித்த கறிவேப்பிலை கலந்து பரிமாறலாம். சுவையாக இருக்கும்.

• கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழையை வாங்கிய உடன் வாழைப்பட்டையில் சுற்றி வைத்தால் வாடாமல் இருக்கும்.

• எண்ணெய்ப் பிசுக்கு இருக்கும் பாத்திரத்தில் ஒரு கரண்டி மோர்விட்டுக் கலக்கிய பிறகு தேய்த்தால் பிசுக்கு நொடியில் போய்விடும்.

• பாலை புரை ஊற்றி வைக்கும் போது அதில் கொஞ்சம் அரிசிக் கஞ்சியைக் கலந்து ஊற்றி வைத்தால் தயிர் கட்டியாக வரும்.

• வடை மாவில் தண்ணீர் அதிகம் சேர்த்து விட்டால் ஒரு மேஜைக் கரண்டி நெய் சேர்த்துவிடுங்கள். மாவு இறுகிவிடும்.

• ரவை உப்புமா அதிகமாக மீந்துவிட்டால் அதில் சிறிதளவு அரிசி மாவைச் சேர்த்து பிசைந்து வடை போன்று பொரித்தெடுத்துவிடுங்கள். சுவையாக இருக்கும்.

• எந்தவிதப் பாயசமாக இருந்தாலும் அதில் ஒரு மேஜைக்கரண்டி வெந்த பயத்தம் பருப்பைச் சேர்த்துவிட்டால் பாயசத்தின் சுவை பிரமாதமாக இருக்கும். 
- சி.ஆர்.ஹரிஹரன், ஆர்.ஜெயலட்சுமி 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments