முகப்பு
மகளிர்மணி

பனீர் டிக்கா

இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து அரைக்கவும், அதனுடன் சீரகப் பௌடர், எலுமிச்சைச் சாறு, 2 மேசைக்கரண்டி எண்ணெய், மஞ்சள் கேசரி பௌடர், உப்பு, கல் உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.

Updated On : 4 மே 2025, 12:02 am IST
பகிர்:

தேவையான பொருள்கள்:

குட மிளகாய்- 1 வட்டமாக நறுக்கியது

வெங்காயம்- 2 வட்டமாக நறுக்கியது

Advertisement

தயிர்- 1 மேசைக்கரண்டி

இஞ்சி- ஒன்றரை அங்குலத் துண்டு

காய்ந்த மிளகாய்- 2

எலுமிச்சைச் சாறு- அரை மூடி

சீரகப் பௌடர்- அரை தேக்கரண்டி

உப்புத் தூள்- 1 தேக்கரண்டி

தக்காளி- 1

பனீர்- 250 கிராம் சிறு துண்டுகளாக

பூண்டு- 4 பற்கள்

கல் உப்பு- அரை தேக்கரண்டி

மஞ்சள் நிற கேசரி பௌடர்- சிறிது

எண்ணெய்- 4 மேசைக்கரண்டி

செய்முறை:

இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து அரைக்கவும், அதனுடன் சீரகப் பௌடர், எலுமிச்சைச் சாறு, 2 மேசைக்கரண்டி எண்ணெய், மஞ்சள் கேசரி பௌடர், உப்பு, கல் உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். விழுதில் பாதியை பனீர் துண்டுகள் மேல் பூசி, ஒரு மணி நேரம் ஊறவிடவும்.

வெண்ணெய் தடவிய தட்டில் பனீர் துண்டுகளை அடுக்கி ஓவனில் 15 நிமிடங்கள் சூடு செய்யவும். ஒரு வாணலியில் 2 மேசைக் கரண்டி எண்ணெய்விட்டு குடமிளகாய், வெங்காயம் சதையை அகற்றிய தக்காளி, இஞ்சி- பூண்டு விழுது, எலுமிச்சைச் சாறு சேர்த்து வதக்கி, பனீர் துண்டுகளைச் சேர்த்துப் பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.