சரித்திரம் படைத்த மகளிர்...
ரஷியாவில் மிகவும் பிரபலமான ஆட்சியாளர்களில் ஒருவரான மகாராணி கேத்தரின், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அரியணையில் இருந்தார்.
ரஷியாவில் மிகவும் பிரபலமான ஆட்சியாளர்களில் ஒருவரான மகாராணி கேத்தரின், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அரியணையில் இருந்தார். அவர் உலக வரலாற்றில் அதிசக்தி வாய்ந்த பெண் ஆட்சியாளராக விளங்கி னார்.
அந்தக் காலகட்டத்தில் உலகின் வலிமையான பேரரசுகளில் ஒன்றாக ரஷியா இருந்தது. நம்ப முடியாத அளவுக்குச் செல்வம் கொண்டிருந்தார். தங்கம், விலைமதிப்பற்ற பொக்கிஷங்களால் அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான அரண்மனைகளில் வசித்து வந்தார்.
சீனப் பேரரசை ஆட்சி செய்த ஒரே பெண்ணான பேரரசி வூ, உலக வரலாற்றில் மிகவும் பணக்காரப் பெண்மணியாகக் கருதப்படுகிறார். சீனாவில் டாங் வம்சம் ஆட்சியில் இருந்தபோது, இவர் ஆட்சி செய்தார். மிகவும் பரந்த, சக்தி வாய்ந்த ஒரு பேரரசை தனது கட்டுக்குள் வைத்திருந்தார். யாரிடமும் இல்லாத நகைகளை இவர் வைத்திருந்தார்.
மேலும், அவர் பிரமாண்டமான விழாக்களையும் நடத்தினார். பல நூற்றாண்டுகள் கழித்து இவர் இன்றும் நினைவு கூரப்படும் வகையில் மிகப் பெரிய அரசை உருவாக்கியவர்.