கோடைக்கு இதமான தக்காளி!
கோடையில் தக்காளி சாப்பிடுவதால் ...
ஆர். ஜெ.
கோடையில் தக்காளி சாப்பிடுவதால் உடல் சோர்வு, உடல் சூடு ஆகியவை தணியும்.
தக்காளியில் பாஸ்பரஸ், கால்சியம் போன்றவை அதிகமாகவும், இரும்புச்சத்து, வைட்டமின் பி போன்றவை குறைவாகவும் இருக்கின்றன. மாவுச்சத்து நான்கு சதவீதம்தான் உள்ளது. ஆனால், வைட்டமின் ஏ-யும் வைட்டமின் சி- யும் அதிகமாக இருக்கிறது .
Advertisement
Advertisement
தக்காளியைச் சாப்பிட்டு வந்தால் பார்வை கூர்மையாக இருக்கும். ரத்தம் சுத்தமாகும். இதில் மாவுச்சத்து குறைவாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் தாராளமாகச் சாப்பிடலாம்.
தக்காளியை அளவோடு சாப்பிட்டு வந்தால் சிறுநீர் சிரமமில்லாமல் பிரியும். அதன் மூலமாக நோய்க் கிருமிகள் வெளியேற்றப்படுகின்றன. சிறுநீரகக் கோளாறு, அஜீரணம், மலச்சிக்கல், ரத்த சோகை போன்றவை எளிதில் குணமாகின்றன.-
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.