தேவையான பொருள்கள்:
அவல், தக்காளி- தலா 400 கிராம்
பச்சை மிளகாய்- 15
கறுப்பு எள், சாம்பார் பொடி, மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி, வெல்லம் பொடித்தது, கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு- தலா 1 மேஜை கரண்டி
வேர்க்கடலைப் பருப்பு- 1 பிடி
வெங்காயம்- 5
எலுமிச்சம் பழம்-1
கொத்துமல்லித் தழை- 1 கட்டு
தேங்காய்- 1 மூடி
கறிவேப்பிலை- 1 ஆர்க்கு
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
தக்காளியை வெந்நீர் ஊற்றி, சிறிது நேரம் கழித்து தோல் உரித்து, ஜூஸ் எடுக்க வேண்டும். அவலை பொடி செய்ய வேண்டும். ஒரு பாத்திரத்தில் தக்காளி ஜூஸ், பொடித்த அவல், மஞ்சள் பொடி, சாம்பார் பொடி, உப்பு, பொடித்த வெல்லம், பெருங்காயப் பொடி, தண்ணீர் கலந்து அடுப்பில் வைக்க வேண்டும்.
வாணலியை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய்விட்டு கடலைப் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாயை வதக்கி, அவலை அதில் போட்டு பொடித்த எள்ளையும் போட்டு நன்றாகக் கிளறவேண்டும். அதில் உப்பு சேர்த்து, தேங்காய்த் துருவலையும் போடவேண்டும். கீழே இறக்கும் முன்பு எலுமிச்சம் பழச்சாறைப் பிழிந்து இறக்கிவுடன் கொத்துமல்லியைத் தூவ வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.