மூலிகைப்பொடி
இலைகளைத் தனித்தனியாக கழுவி, துணியில் பரவலாகப் போட்டு, நன்கு உலர்ந்ததும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுக்கவும். வறுத்தவை எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து, சுக்கை நசுக்கிப் போட்டு, உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.
தேவையான பொருள்கள்:
வல்லாரை இலை, முடக்கத்தான் இலை, துளசி இலை, தூதுவளை இலை, புதினா -தலா ஒரு கைப்பிடி அளவு
சுக்கு -ஒரு துண்டு
Advertisement
Advertisement
உப்பு -தேவையான அளவு.
செய்முறை:
இலைகளைத் தனித்தனியாக கழுவி, துணியில் பரவலாகப் போட்டு, நன்கு உலர்ந்ததும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுக்கவும். வறுத்தவை எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து, சுக்கை நசுக்கிப் போட்டு, உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.
வல்லாரை ஞாபக சக்தி தரும். முடக்கத்தான் கீரை மூட்டுவலிக்கு சிறந்த மருந்து. துளசி, தூதுவளை தொண்டைக்கட்டு, சளி, இருமல் வராமல் தடுக்கும். புதினா வாய் துர்நாற்றத்தைப் போக்கும். சுக்கு வாயுத்தொல்லையை நீக்கும். இத்தனை பயனுள்ள இந்த மூலிகைப்பொடி உடல் ஆரோக்கியத்துக்குச் சிறந்த துணைவன்.
நாகஜோதி கிருஷ்ணன்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.