முகப்பு
மகளிர்மணி

வத்தக்குழம்பு சுவை அதிகரிக்க...

இரண்டு மணிநேரம் இட்லிகளை ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு எடுத்து, சிறிது நேரத்துக்குப்பின் உப்புமா செய்தால் கட்டியில்லாமல் உதிர் உதிராக இருக்கும்.

Updated On : 3 மே, 2026 at 4:04 AM
பகிர்:

இரண்டு மணிநேரம் இட்லிகளை ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு எடுத்து, சிறிது நேரத்துக்குப்பின் உப்புமா செய்தால் கட்டியில்லாமல் உதிர் உதிராக இருக்கும்.

சாம்பாருக்கு புளியின் அளவைக் குறைத்து, தக்காளியைச் சேர்த்து கொதிக்க விட்டால் சாம்பாரின் சுவை அதிகரிக்கும்.

தயிர்ப் பச்சடி, சாலட் போன்றவற்றுக்குத் தேங்காய் எண்ணெயில் கடுகு மற்றும் கறிவேப்பிலை தாளித்துச் சேர்த்துப் பாருங்கள். அவை நல்ல வாசனையுடன் இருக்கும்.

Advertisement

வத்தக்குழம்பு செய்யும்போது இரண்டு தேக்கரண்டி கடலைப்பருப்பை வறுத்து, பொடி செய்து குழம்பில் சேர்த்தால் சுவை அருமையாக இருக்கும்.

பச்சை வேர்க்கடலைக் குழம்பு செய்யும்போது வேர்க்கடலையை ஊறவைத்து சேர்த்தால் சீக்கிரம் வெந்து விடும்.

வாழைப்பூவை ஆய்ந்ததும் மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றினால் உதிர் உதிராகி விடும். பிறகு பொரியல் செய்வது சுலபம். பொடியாக நறுக்கும் நேரமும் மிச்சம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.