குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டால் என்ன செய்வது?
வீட்டு சமையல் குறிப்புகள்...
விமலா சடையப்பன்
குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டால், வாழைத்தண்டு ஒரு துண்டு போட்டால் சரியாகிவிடும்.
குளிர்சாதனப் பெட்டியை பச்சைக்கற்பூரம் கலந்த தண்ணீரில் துடைத்தால் பூச்சிகள் வராது.
Advertisement
Advertisement
குருமா தீர்ந்து
விட்டால் ஒரு கைப்பிடி நூடுல்ஸை போட்டு கொதிக்க வைத்தால், கெட்டியாவதுடன் சுவையும் கூடும்.
கத்தியைச் சூடாக்கி ரொட்டியை வெட்டினால் பிசிறு இல்லாமல் வெட்டலாம்.
வத்தல் குழம்பு வைக்கும்போது ஓமம் தாளித்துக் கொட்ட, நல்ல மணத்துடன் செரிமானம் ஆகும்.
ஆரஞ்சுப் பழத்தோலை சேர்த்து ரசம் வைத்தால், மணமும் சுவையும் கூடுதலாக இருக்கும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.