சாதனை பெண்
பெண்கள் பள்ளிக்குச் செல்லக்கூடாது என்ற வழக்கம் முன்பு இருந்தது.
பெண்கள் பள்ளிக்குச் செல்லக்கூடாது என்ற வழக்கம் முன்பு இருந்தது. இதனால் பெண்களால் அப்போது படிக்க முடியவில்லை. ஆனாலும், அவர் தனது தோழியர்களிடம் கற்பனைக் கதைகளைச் சொல்வதில் ஆர்வம் கொண்டிருந்தார்.
இவர் பட்டம்மாள் என்பவரை எழுதச் சொல்லி, அதைப் பார்த்து மகிழ்வார். அப்படி எழுதப்பட்ட நாடகம்தான் 'இந்திர மோகனா'. 1924-இல் அந்த நாடகம் அச்சில் பதிக்கப்பட்டு வெளிவந்தது. தொடர்ந்து, பட்டம்மாள் வாயிலாகவே அந்தப் பெண் தமிழ் மொழியைக் கற்றார்.
'ஜகன்மோகினி' என்ற பத்திரிகையை 35 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தி சாதனை படைத்தார். அந்தப் பத்திரிகையில்தான் 'வைதேகி' என்ற நாவலை அவர் முதலில் எழுதினார்.
Advertisement
Advertisement
தமிழில் துப்பறியும் நாவலை முதலில் எழுதிய பெண்மணி என்ற பெயரையும் அவர் பெற்றார். அவர்தான் வை.மு.கோதைநாயகி.