சாய்பாபாவின் பொன்மொழிகள்!
புகழைத் தேடி அலைய வேண்டாம். அது தானாகவே வரவேண்டும்.
புகழைத் தேடி அலைய வேண்டாம். அது தானாகவே வரவேண்டும்.
உடலைத் தூய்மையுடன் வைத்திருங்கள். ஏனெனில் அது கடவுள் வாழும் இடம்.
சுயநலமற்ற சேவையே மகிழ்ச்சிக்கு வழி.
மன அமைதியை வேண்டிக்கொள்வதே நியாயமான பிரார்த்தனை.
பொன்னை இழந்தால் திரும்பப் பெறலாம். காலம் போனால் போனதுதான்.
கல்வியின் நோக்கம் நற்குணங்களைக் கற்பதே.
பொறுமையே தவம். திருப்தியே மகிழ்ச்சி. கருணையே புண்ணியம். கடவுளின் நாமமே இன்பம்.
பொருள் இல்லாதவன் ஏழை அல்ல.... ஆசை அதிகம் உள்ளவனே ஏழை.
இறைவனைப் பற்றிய நினைவு, தேனை மட்டும் அருந்தும் தேனீ போன்றது.
கடவுளை அடைய மிக எளிமையான வழி, பிறரிடம் அன்பு செலுத்துவதே.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.