முகப்பு
சிறுவர்மணி

பொன்மொழிகள்

வருமானம் என்பது பலருக்கு தற்காலிகமானதாகத்தான் இருக்கிறது! ஆனால் செலவோ நித்தியமாக இருக்கிறது! 

Updated On : 6 ஜூன் 2020, 5:11 pm IST
பகிர்:

வருமானம் என்பது பலருக்கு தற்காலிகமானதாகத்தான் இருக்கிறது! ஆனால் செலவோ நித்தியமாக இருக்கிறது! 
- பிராங்ளின்

வாழ்க்கையில் லட்சியம் இருந்தால்தான் வாழ்க்கையை ஆர்வத்துடன் எதிர்நோக்கி மகிழ்ச்சியையும் செல்வத்தையும் தொடர்ந்து பெற
முடியும். 
- ஸ்டீவன்சன்

விவாதத்தின்போது மேற்கோள் காட்டுபவன் தனது நினைவுத் திறனைக் காட்டுகிறானே தவிர தனது அறிவைப் பயன் படுத்துவதில்லை. 
- கார்லைல்

Advertisement

Advertisement

பிறர் தவறுகளைக் கண்டு தன் தவறுகளைத் திருத்திக்கொள்பவனே அறிவாளி 
- ஹெர்பர்ட்

உயர்ந்த மனிதர்கள் அமைதி காப்பார்கள். ஆனால் நடத்தையிலும், செயலிலும் உறுதியாக இருப்பார்கள் 
- கன்பூசியஸ்

போரால் சாதித்தவைகளைவிட புன்சிரிப்பால் சாதித்துக் கொண்டவை ஏராளம்! 
- ஷேக்ஸ்பியர்

உலகில் அனைவருக்கும் சமமாகவும் இலவசமாகவும் கிடைக்கும் அபூர்வமான மூலதனம் "காலம்!' 
- விவேகானந்தர்

உயர்ந்த லட்சியத்தை அடைவதற்குத் தயாராயிருப்பவன், இடையில் ஏற்படும் இழப்புகளைத் தாங்கிக் கொள்வான்! 
- வால்டேர்

மனிதன் மிக உயரமான உச்சியை அடையலாம்!..... ஆனால் அங்கேயே நீண்ட நாள் தங்க முடியாது! 
- பெர்னார்ட் ஷா

கடவுளிடம் கேட்க வேண்டியதைக் கேட்போம்! அவர் தருவதைப் பெற்றுக் கொள்ளத் தயாராக இருப்போம்! 
- நார்மன் வின்சென்ட் பீல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments