மனித தெய்வம்!
பாடம் சொல்லித் தருவார்படிக்கச் சொல்லிக் கேட்பார்!தேடும் அறிவைப் பெருக்கித்
பாடம் சொல்லித் தருவார்
படிக்கச் சொல்லிக் கேட்பார்!
தேடும் அறிவைப் பெருக்கித்
திறனை வளரச் செய்வார்!
கல்விச் சேவை செய்து
காக்கும் மனித தெய்வம்!
உள்ள இருளைப் போக்கி
ஒளிர வைக்கும் நெஞ்சம்!
நல்ல வழிகள் காட்டி
நடக்கச் செய்து மகிழ்வார்!
வல்ல பாதை தன்னில்
வாகை சூட்டி நெகிழ்வார்!
Advertisement
Advertisement
மனத்தில் நேர்மை ஒழுக்கம்
மலரச் செய்து பார்ப்பார்!
குணத்தில் மேலோன் ஆக்கும்
கொள்கை தன்னை ஆர்ப்பார்!
மதிப்பை உயரச் செய்வார்!- அவரைத்
துதித்துப் போற்றி வாழ்வோம்!- அவர்
வழியில் நாமும் செல்வோம்
வாழ்வில் வெற்றி கொள்வோம்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.