பாரதி பாட்டில் பண்பு...
பாட்டுக்கொரு புலவன் பாரதி பாட்டைப் படிக்கும் மாணவன்
பாட்டுக்கொரு புலவன் பாரதி
பாட்டைப் படிக்கும் மாணவன்
நாட்டுக்கு உழைக்கும் நற்பண்பை
நாளும் பெற்று உயர்வான்
வீட்டை மறக்கும் விளையாட்டில்
வீண்பொழுது போக்க மாட்டான்
நாட்டைக் காக்கும் விளையாட்டில்
நாட்டம் கொள்வான் வீரனா வான்
ஏட்டு படிப்போடு நில்லாது
ஏற்றமான செயலைச் செய்வான்
கேட்டும் பெறுவான் அறிவை
கேடின்றி வாழ்வான் உலகில்..