கொண்டாடு
கோடைமழை பெய்தாலே கோலாகலம் கொடும்வெப்பம் அடக்கிவிடும் ஆனந்தம்
கோடைமழை பெய்தாலே கோலாகலம்
கொடும்வெப்பம் அடக்கிவிடும் ஆனந்தம்
காய்ந்திட்ட மரம்செடிகள் விழித்துவிடும்
Advertisement
Advertisement
கால்நடைகள் துள்ளாட்டம் போட்டுவிடும்
--
குளம்குட்டை சற்றேனும் நிரம்பிவிடும்
கொடும் தாகப் பிணிவிட்டு ஓடிவிடும்
கொட்டுகிற மழையைநாம் பூசிப்போம்
குட்டைகளில் மழைநீரைச் சேமிப்போம்
--
குளிர்காற்று நமைவந்து தழுவட்டும்
குதூகுலம் மனதில்வந்து தங்கட்டும்
கோடைமழை கிடைக்காது கொண்டாடு
கருத்தாக விதைவிதைத்து மகிந்ழ்தாடு!
வசீகரன், தேனாம்பேட்டை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.