முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

அறிந்துகொள்வோம்..

திரு.வி.கல்யாணசுந்தரனாரின் பல்சமய நூல்கள் அறிமுகம்

Updated On : 28 ஏப்ரல், 2024 at 11:37 AM
பகிர்:

"முருகன் அருள்வேட்டல்', "கிறிஸ்து அருள்வேட்டல்', "அருகன் அருள் வேட்டல்' உள்பட பல சமய நூல்களை எழுதியவர் என்கிற தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார்.

"பரிமாற்கலைஞர்' எழுதிய ஒறு நூல் "தனிப்பாசுரத் தொகை'. இதை டாக்டர் ஜி.யு. போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.

கி.வா.ஜகந்தாதன் மதுரை பல்கலை. பேரவை உறுப்பினராக இருந்தநேரத்தில் ஓர் கூட்டத்தில் பேராசிரியர் ஒருவர் எழுந்து, ""ஒன்றாம் வகுப்பு முதல் திருக்குறள் தமிழ்ப் பாடமாக இருக்கிறதே. பட்ட வகுப்புகளுக்கும் ஏன்?'' என்று கேட்டார். இதற்கு கி.வா.ஜ.வோ, ""ஐந்து வயது முதல் பதினைந்து வயது வரை உணவில் சோறு இருக்கிறது. பிறகு இருபத்தைந்து வயதில் சாப்பிடும்போது சோறு ஏன்?'' என்று கேட்டு திடுக்கிடவைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.