மக்களைப் பார்க்கவே...
பிரதமர் ஜவாஹர்லால் நேரு ஒருமுறை புதுச்சேரிக்கு விஜயம் செய்தார். அவருக்கு பாதுகாப்பு அளிப்பதாக, ஏராளமான காவலர்கள் சூழ்ந்துகொண்டனர். உடனே நேரு, ''நான் காவலர்களைப் பார்ப்பதற்காக இங்கு வரவில்லை. மக்களைப் பார்க்கத்தான் வந்தேன்'' என்று கூறினார். உடனே காவலர்கள் வழிவிட்டு விலகி நின்றனர்.
-ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.