மகாபாரதம் உணர்த்தும் சாராம்சம்..!
ஐந்து லட்சம் வரிகளைக் கொண்ட மகாபாரதத்தின் சாராம்சத்தைச் சுருக்கமாக அறியுங்கள்.
ஐந்து லட்சம் வரிகளைக் கொண்ட மகாபாரதத்தின் சாராம்சத்தைச் சுருக்கமாக அறியுங்கள்.
உங்கள் குழந்தைகளின் நியாயமற்ற கோரிக்கைகள், ஆசைகளைச் சரியான நேரத்தில் கட்டுப்படுத்தவில்லை என்றால், நீங்கள் வாழ்க்கையில் ஆதரவற்றவர்களாகி விடுவீர்கள்- கௌரவர்கள்.
நீங்கள் எவ்வளவு வலிமையாக இருந்தாலும் அநீதியை ஆதரித்தால் உங்கள் பலம், ஆயுதங்கள், திறமைகள் ஆசிகள்.. போன்றவை பயனற்றதாகிவிடும்- கர்ணன்.
Advertisement
Advertisement
செல்வம், அதிகாரம், தவறு செய்பவர்களின் ஆதரவைத் தவறாமல் பயன்படுத்துவது இறுதியில் முழு அழிவுக்கு இட்டுச் செல்கிறது- துரியோதனன்.
அநியாயக்காரர்களிடம் சரணடைய வேண்டும் என்பது போன்ற வாக்குறதிகளை ஒருபோதும் கொடுக்காதீர்கள்- பீஷ்மர்.
சுயபலம், செல்வம், பெருமை, அறிவு, பற்றுதல் அல்லது காமம் ஆகியவற்றால் குருடனாக இருப்பவர் என்று பொருள்படும் ஒரு குருடனின் அதிகாரத்தில் கடிவாளத்தை ஒருபோதும் ஒப்படைக்காதீர்கள். அது அழிவுக்கு வழிவகுக்கும்- திருதராஷ்டிரன்.