ரெக்கைக் கட்டிப் பறக்கும் சைக்கிள்...
கிராமப்புறங்களில் அத்தியாவசியப் போக்குவரத்துச் சாதனமாக இன்றும் சைக்கிள் விளங்கிவருகிறது.
கிராமப்புறங்களில் அத்தியாவசியப் போக்குவரத்துச் சாதனமாக இன்றும் சைக்கிள் விளங்கிவருகிறது. கர்நாடகத்தில் விஜயபுரா, பாகல்கோட் உள்ளிட்ட பகுதிகளில் வசிப்போருக்கு சைக்கிள் ஓட்டுவது வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இதற்காக, விஜயபுராவின் புறநகர் புட்னால் கிராமத்தில் ரூ.10 கோடியில் உலகத் தரம் வாய்ந்த 'வேலோட்ரோம்' சாலை அமைக்கப்பட்டுள்ளது. சைக்கிள் போட்டிகளில் பங்கு பெறுபவர்கள் இந்தச் சாலைகளைப் பயன்படுத்தி தங்கள் திறனை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
இந்தப் பகுதியில் சைக்கிள் ஓட்டும் பாரம்பர்யம்
17-ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது. மும்பை மாகாணத்தின் கீழ் பல சமஸ்தானங்கள் இந்தப் பகுதியை ஆட்சிபுரிந்துள்ளன.
Advertisement
ஆட்சியாளர்கள் வருடாந்திரக் கண்காட்சியையும், தசரா போன்ற பண்டிகைகளின்போது சமஸ்தானங்களுக்கு இடையேயான போட்டிகளையும் ஏற்பாடு செய்வதன் மூலம் சைக்கிள் ஓட்டுதல் உட்பட பல விளையாட்டுகளை ஊக்குவித்தனர்.
கிராமங்கள் முழுவதற்கும் செய்திகளை அனுப்ப அரச குடும்பத்தினரும் சைக்கிள்களையே பயன்படுத்தினர். இந்த ஊரிலேயே சைக்கிள் போட்டியில் தேசிய அளவில் தங்கப் பதக்கம் பெற்றவர்களும் இருக்கின்றனர்.
இந்தப் பகுதியில் மேம்பட்ட சைக்கிள்களை ஆங்கிலேயே அரசு அறிமுகப்படுத்தி, சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு காலணிகள், தலைக்கவசங்களை வழங்கியது. அல்மாட்டி அணை கட்டப்பட்டதினால் பலருக்கு சைக்கிளே போக்குவரத்து வசதியானது. இந்தச் சூழலில் சந்துரு குரானி, ராஜேசாப் அத்தார் போன்ற திறமையான சைக்கிள் ஓட்டுநர்கள் கிடைத்தனர்.
ஜம்கண்டியில் உள்ள கும்பரஹல்லா கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் சைக்கிள் உள்ளது.