இல்வாழ்வு வேண்டாம்
'மனைக்கு மாட்சிமைப்பட்டதான குணங்களுடன், தன் குலவளர்ச்சிக்கான பிள்ளைப்பேறும் இல்லாமற் போனாலும், ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டவன், அவளை விட்டு நீங்குவது என்பது முடியாததாகும்.
மாண்ட குணத்தோடு மக்கட்பேறு இல்லெனினும்,
பூண்டான் கழித்தற்கு அருமையால்-பூண்ட
மிடியென்னுங் காரணத்தின் மேன்முறைக் கண்ணே
Advertisement
கடி'யென்றார், கற்றறிந் தார்.
(பாடல் 56 அதிகாரம்: துறவு)
'மனைக்கு மாட்சிமைப்பட்டதான குணங்களுடன், தன் குலவளர்ச்சிக்கான பிள்ளைப்பேறும் இல்லாமற் போனாலும், ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டவன், அவளை விட்டு நீங்குவது என்பது முடியாததாகும்.
அதனாலும், தான் மேற்கொண்ட வறுமையால் நேரும் வருத்தம் என்னும் காரணத்தாலும், மேலான முறைமையாகிய துறவொழுக்கத்திலே நிலைபெற்று நின்று, அந்த இல்வாழ்வையே விட்டுவிடுவாயாக' என்பார்கள், நல்ல நூற்களைக் கற்று, உண்மையறிவை அறிந்த சான்றோர்கள்.