FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திவ்யதேசத்து திருமால்கள்

ஆண்டுதோறும் மாசிமாதம் சுக்லபட்சம் பௌர்ணமி, மகம் கூடிய நன்னாளில் அன்பில் திவ்யதேசத்து பெருமாளும் உத்தமர் கோயில் திவ்தேசத்து புருஷோத்தமனும் திருவரங்கம் வடதிருக்காவிரியான கொள்ளிடத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி மகோத்ஸவம் நடைபெறுகிறது.

24 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

ஆண்டுதோறும் மாசிமாதம் சுக்லபட்சம் பௌர்ணமி, மகம் கூடிய நன்னாளில் அன்பில் திவ்யதேசத்து பெருமாளும் உத்தமர் கோயில் திவ்தேசத்து புருஷோத்தமனும் திருவரங்கம் வடதிருக்காவிரியான கொள்ளிடத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி மகோத்ஸவம் நடைபெறுகிறது.

இரண்டு திவ்யதேசத்து எம்பெருமான்களும் திருவரங்கம் திருமங்கை மன்னன் படித்துறையான பாடுவான் துறைக்கு அண்மையில் நடுக்காவிரியின் மணற்பிரதேசத்தில் அமைக்கப்பெற்ற தென்னங்கீற்றுப் பந்தலில் விஜயம் செய்து அருள்பாலிப்பர்.

திருவரங்கநாதனும் பல ஊர்களுக்கு பிரம்மோற்சவ நிமித்தமாக எழுந்தருளும்போது தோளுக்கினியான் அல்லது திருப்பல்லக்கிலே எழுந்தருளுவது போன்றே இவ்வெம்பெருமாள்களும் எழுந்தருளுவதால் அன்றைய நாள் முழுவதும் அவரவர்களுக்கென அமைக்கப்பெற்ற கீற்றுப் பந்தலில் காட்சிதருவோரைக் கண்டு சேவிப்பதே கண்பெற்ற புண்ணியமாகும்.

Advertisement

Advertisement

எனவே, மாசிமகத்தன்று அன்பில், உத்தமர்கோயில் திருமால்கள் வெயில் ஆரம்பிக்கும் முன்னர் கொள்ளிடத்தின் மணல் வெளியில் அருள்பாலித்து வெயில் தாழ்ந்தவுடன் அங்கிருந்து தன் திவ்யதேசம் எழுந்தருளுவது வழக்கமாக நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments