பொன்மொழிகள்!
சுற்றம், செல்வம், அழகு, உயர்குலம் முதலிய நலன்கள் நிலையானவை அல்ல.
சுற்றம், செல்வம், அழகு, உயர்குலம் முதலிய நலன்கள் நிலையானவை அல்ல.
-வாக்குண்டாம்
ஹே விஷ்ணு! உனது திருநாமம் சின்மயமானது; மிகவும் பிரகாசமானது. அதன் பெருமையே அளவிடற்கரியது. முழுவதுமாகச் சொல்வது இயலாதுதான். ஆனாலும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கூறுகிறோம். அதனால், நாங்கள் நல்லறிவும் பக்தியும் பெறுவோம்.
-ரிக் வேதம் 1.15.63
பகவானது திருப்பெயர்களைக் கூறுவதில் ஏதாவது தவறு நேர்ந்தால், அந்தத் தவற்றால் நேரும் பாவங்களை திருநாமமே நீக்குகிறது.
-ஸ்மிருதி
Advertisement
ஆயிரம் திருநாமங்கள் கொண்டவரும், ஆயிரம் கோடி யுகங்களை இயக்குபவரும் அழிவற்றவருமான பகவானுக்கு வணக்கம்!
-ஸ்காந்தம், வைஷ்ணவ காண்டம் - 24.20
ஒருவன் இறந்தபிறகு பரலோகம் செல்கிற வழிக்குக் கட்டுச்சோறு "ஹரி' என்ற இரண்டு எழுத்துக்கள். அந்த இரண்டெழுத்து சம்சார நோய்க்குச் சிறந்த மருந்து; இதுவே இந்த உலகில் துன்பங்களுக்கும், மனநோய்க்கும் மருந்தாகும்.
-வாமன புராணம்
கம்மல், மூக்குத்தி, வளையல், சங்கிலி என்று அணிகலன்கள் பலவகையாக இருக்கின்றன; என்றாலும், அவை அனைத்தும் பொன்னால் செய்யப்படுபவையாகும். அதுபோல் பல்வேறு உருவங்கள் தெய்வத்திற்கு இருந்தாலும், அந்தத் தெய்வங்கள் அனைத்தும் ஒரே தெய்வத்தின் தோற்றங்களாகும்.
-திருமூலர்
எந்த தேவி எல்லா உயிர்களிலும் தாய் வடிவத்தில் உறைகிறாளோ அந்த தேவிக்கு நமஸ்காரம்.
-ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள், பாகம் 2, பக் 150
மனிதப்பிறவி பெற்றவன், பற்றற்ற சான்றோர்களின் சத்சங்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அந்த சத்சங்கத்தால் பெற்ற ஆத்மஞானம் (பகுத்தறிவு) என்னும் கூரிய வாள் கொண்டு, தன்னுடைய இந்த உலகத்தில் இருக்கும் தளைகளை அறுத்தெறிய வேண்டும்.
பகவானது கல்யாண குணங்களை வாயாரப் பாட வேண்டும்; பிறர் சொல்லக் கேட்க வேண்டும். அதனால் பக்தியுணர்வு பெற்று, இந்த சம்சார மார்க்கத்தை மிகவும் எளிதாகக் கடந்து பகவானை அடையலாம்.
-ஸ்ரீமத் பாகவதம் 12.5.16
மக்களுக்கு கலியுகத்தில் ஹரியின் திருநாமத்தைத் தவிர வேறு புகலிடமில்லை.
-ப்ரஹந் நாரதீய புராணம் 1.41.15
""அச்சுதா! அநந்தா! கோவிந்தா!'' என்ற மூன்று நாமோச்சாரண மருந்தினாலேயே அனைத்து நோய்களும் அழிந்துவிடும் இது சத்தியம் என்று நான் கூறுகிறேன்.
-சரக ஸம்ஹிதை