முகப்பு
வெள்ளிமணி

பொன்மொழிகள்!

உண்மையைப் பேச வேண்டும். அதையும் பிரியமாகப் பேச வேண்டும். பிரியமில்லாத உண்மையைச் சொல்லக் கூடாது. பிரியமிருந்தாலும் பொய்யைச் சொல்லக் கூடாது;  இது பழைமையான தர்மம்.

Updated On : 12 நவம்பர் 2021, 7:46 pm IST
பகிர்:


உண்மையைப் பேச வேண்டும். அதையும் பிரியமாகப் பேச வேண்டும். பிரியமில்லாத உண்மையைச் சொல்லக் கூடாது. பிரியமிருந்தாலும் பொய்யைச் சொல்லக் கூடாது;  இது பழைமையான தர்மம்.
-மனுஸ்மிருதி

யாருமற்ற அனாதைகளையும், ஏழைகளையும் அடித்துத் துன்புறுத்தக் கூடாது. அதனால் வரும் பாவம் எங்குச் சென்றாலும் தொலையாது தொடர்ந்து வந்து வருத்திக்கொண்டே இருக்கும்.                
-கொங்கணச் சித்தர்

ஞானி ஒருபோதும் தனிமையில் இல்லை. அவன் தனக்குள்ளேயே அனைத்திற்கும் அதிபதியான இறைவனுடனேயே இருக்கிறான். 
-இந்து மதம்

Advertisement

Advertisement

சிலர் மண்ணாசைக்கும் பெண்ணாசைக்கும் மயங்காத தூய்மையான இதயம் உள்ளவர்கள். அவர்களிடம் ஸ்ரீமந் நாராயணனாகிய என்னுடைய அருட்சக்தியின் வெளிப்பாடு அதிகமாக இருக்கும். இதற்கு நேர்மாறான வாழ்க்கையில் உழல்பவர்களிடம் ஒருபோதும் நான் வெளிப்படுவதில்லை.    
-கருட புராணம்

நாம் சத்தியம், நற்சொல், நற்செயல், பெருந்தன்மை, பொறுமை என்று உலக நன்மைக்கான வேலைகளில் ஏதாவதொன்றைச் செய்துகொண்டேயிருக்க வேண்டும். இவையெல்லாம் மிகவும் உதவுபவை. 
-மகான்களுடைய சீரிய உபதேசம்

பிறந்தவர்கள் இறப்பதும், இறந்தவர்கள் பிறப்பதும் இயல்பாகும். தர்மம் சிறப்பைத் தரும், அதர்மம்துன்பத்தைத் தரும்.
-மணிமேகலை (கந்தில்பாவை)

நாம் வேத சாஸ்திரங்கள் கற்று தேர்ந்த பெரியோர்களை நமஸ்காரம் செய்ய வேண்டும். அவ்விதம் செய்தால், கற்பகமரம் போல அவர்களின் ஆசீர்வாதம் நமக்கு பல நன்மைகளைக் கொடுக்கவல்லது.
-சாஸ்திர நீதிகள்

உழைப்பு உயர்வைத் தரும், நல்ல எண்ணம் நன்மையைத் தரும், ஒழுக்கம் பெருமையைத் தரும்.
-நீதி சாஸ்திரம்

எவ்வளவோ பேசுகின்ற மனிதன், தான் பிறக்கும்போது தன்னுடன் சொத்து சுகங்களை எடுத்து வந்தானா? இல்லை இறந்து சுடுகாடு போகும்போது அவன் எதையாவது எடுத்துக்கொண்டு போகிறானா?
-பட்டினத்தார்

சிவனடியார்கள் நின்றாலும், இருந்தாலும், கிடந்தாலும், நடந்தாலும், மென்றாலும், துயின்றாலும், விழித்தாலும், மன்றாடும் சிவபெருமான் திருவடிகளை மறவாத உணர்வு உடையவர்கள்.
-பெரிய புராணம்

தேவசக்தியே தூலப் பொருட்களாகவும், சூட்சும பொருட்களாகவும், அமுதமாகவும் விளங்குகிறது.
-பிரச்ன உபநிஷதம் 2.5

யோகிகள் சிலருக்கு  சிரத்தை, வீரியம், ஞாபகசக்தி, மனஒடுக்கம், மெய்ப்பொருள் உணர்வு ஆகியவைகள் வாயிலாக சமாதி கூடுவதுண்டு.
-பதஞ்சலி யோக சூத்திரம் 

பணம் சேரச் சேர மனமும் மாறிக்கொண்டே போகும். பணத்தாசை பிடித்தவர்களுக்கு நல்ல உறவினர்கள் இருக்கமாட்டார்கள்; பெரியோர்களிடமும் அவர்களுக்கு மதிப்பு இருக்காது
.-சுபாஷிதம் (ஒரு சம்ஸ்கிருத சுலோகம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments