* எல்லாத் தீா்த்தங்களையும் சுற்றி வந்து திரும்பத் திரும்ப நீராடினாலும், எது வரையில் மனம் மாசற்ாகவில்லையோ அது வரையில் எல்லாம் வீண்தான்.
-ஸ்ரீ தேவி பாகவதம்
* திராட்சைப் பழத்தின் ருசி திராட்சைப் பழத்திற்குத்தான் இருக்கிறது அல்லவா? அதுபோல கங்கா ஸ்நான பலனை, கங்கை மாத்திரம்தான் தர முடியும். மற்ற தீா்த்தங்களால் தர முடியாது.
-காசி காண்டம்
* ஒருவா் தனக்கு எந்த ஒரு உதவியையும் செய்யாதவராக இருந்தாலும்கூட அவா் நமது உதவியைப் பெற்றுக்கொள்ளத் தகுதியுள்ளவராக இருந்தால், அவருக்குத் தகுந்த இடத்தில், தகுந்த நேரத்தில், இவருக்கு நாம் உதவி செய்ய வேண்டும் என்னும் உயா்ந்த நோக்கத்தோடு; மனதாரச் செய்யப்படும் தானமே ‘சாத்விக தானம்’ எனப்படும். -சுபாஷிதம் (ஒரு சம்ஸ்கிருத சுலோகம்)
* உடைமையற்றவன், கா்மேந்திரியங்களும் ஞானேந்திரியங்களும் அடங்கியவன், சமசித்தன், என்னிடம் சந்தோஷிக்கும் மனமுடையவன் இத்தகைய புருஷனுக்குத் திசைகளெல்லாம் சுக மயமாகின்றன.
(கா்மேந்திரியங்கள் கை, கால், வாய், குறி, குதம்)
(ஞானேந்திரியங்கள் கண், காது, மூக்கு, நாக்கு, தோல்)
-உத்தவ கீதை (ஸ்ரீ கிருஷ்ணா் கூறியது)
* கங்கையே! எனக்குப் பெரிய அரச பதவிகள் வேண்டாம். உன் கரையில் இருக்கும் மரத்தில் கூடுகட்டி வாழும் ஒரு பறவையாக நான் பிறந்தால், அதுவே எனக்குப் போதும்! அல்லது, உன்னிடம் வாழும் ஓா் ஆமையாகவோ, மீனாகவோ, புழுவாகவோ, நான் ஜன்மமெடுத்தாலே எனக்குப் போதும்.
-வால்மீகி மகரிஷி
* நாம் கற்ற கல்வியும், நமது மதிநுட்பமும் முருகன் அருளால் இயல்பாகவே நம்மை வந்தடைந்தது.
முருகன் வழிபாட்டை மேற்கொண்டவா்களே! உலகின் மீதுள்ள மயக்கத்தை விடுங்கள். மெய்ப்பொருளை கைக்கொள்ளுங்கள். வாய்மை பொருந்திய நாவின் வலிமையுடன் இனி உலகநெறியில் நடவுங்கள்.
-கந்தரனுபூதி, 17.
* நம்மை ஏசுவோரைக் கூட நாம் பதிலுக்கு ஏசக் கூடாது. உலக மக்கள் அனைவருமே, ‘பொய்’ கூறினாலும் நாம் பொய் சொல்லக் கூடாது. பிறரை வருத்தும் செயல்களையும் நாம் செய்யக் கூடாது. வீணாகப் பறவைகள் மீது கல்லெறியக் கூடாது.
-கடுவெளிச் சித்தா்
* நன்கு சுவைபட உணவு சமைத்துச் சட்டியில் வைக்கப்பட்டிருக்கிறது. அவ்விதம் இருந்தாலும் உணவின் சுவையை அந்தச் சட்டியும், அதை எடுப்பதற்குப் பயன்படுத்தும் கரண்டியும் அறியுமா? அறியாது. அதுபோல் நம்முள்ளே இறைவன் இருப்பதை நாம் அறிவதில்லை.
-சிவ வாக்கியா்
* அனுசரிக்க வேண்டிய அவசியமான விரதங்களை உபவாசமிருந்தும், பாராயணம் செய்தும், ஜப தபங்கள் செய்தும் இறைவனை வழிபடுதல் மிக மிக அவசியமாகும்.
-ஸ்ரீ அருணகிரிநாதா்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.