துருக்கி: அமெரிக்க தூதரகத்தில் துப்பாக்கிச் சூடு
துருக்கி தலைநகர் அங்காராவிலுள்ள அமெரிக்கத் தூதரக நுழைவு வாயிலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனமான இஹ்லாஸ் கூறியதாவது:
துருக்கி தலைநகர் அங்காராவிலுள்ள அமெரிக்கத் தூதரக நுழைவு வாயிலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனமான இஹ்லாஸ் கூறியதாவது:
அங்காராவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் 6-ஆவது நுழைவு வாயிலில் திங்கள்கிழமை அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
அந்த வழியாகச் சென்ற வெள்ளை நிறக் காரில் இருந்தபடி, நுழைவு வாயிலில் உள்ள பாதுகாப்புச் சாவடியை நோக்கி சுமார் 4 குண்டுகள் சுடப்பட்டன.
எனினும், இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அமெரிக்கத் தூதரகம் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க மதபோகர் ஒருவர் துருக்கி சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தொடர்பாக இரு நாடுகளுக்கும் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.