உலகம்

இறந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகும் ‘புன்னகை முகத்துடன்’ காணப்பட்ட பெளத்த துறவி!

வி. உமா

பாங்காங்கின் தலைநகரான தாய்லாந்தின் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிகிச்சைப் பெற்று வந்த, பெளத்த துறவி லூங் பொர் பியான், தனது 92-வது வயதில் உடல் நலக் குறைவு காரணமாக 16-ம் தேதி இயற்கை எய்தினார்.

கம்போடியாவைச் சேர்ந்த துறவி பியான், மத்திய தாய் மாகாணமான லோப்புரியில் பெளத்த குருவாக தனது வாழ்நாளில் பெரும்பகுதியை துறவறத்திலும் சேவையிலும் கழித்தார். அவர் வாழ்ந்த காலத்தில் அனைவரின் மதிப்பிற்கும் அன்புக்கும் உரியவராகத் திகழ்ந்தார். உடல் நலிவுற்று இயற்கை எய்திய பின் அவரது உடல் லோப்புரியிலுள்ள புத்த மடாலாயத்திற்கு அனுப்பப்பட்டது.

அவர் சேவையாற்றிய அந்த மடாலயத்திலியேயே அவரது உடல் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது. அவரது சீடர்கள் அண்மையில் சவப்பெட்டியில் இருந்து உடலை அகற்றிய போது, அவரது உடல் எவ்வித அழிவுக்கும் சிதைவுக்கும் உட்படாத நிலையில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் ஆச்சரியமான விஷயமாக துறவி பியான் இறந்து பல வாரங்கள் கடந்த நிலையிலும் அதே புன்னகையுடன் தோன்றினார். ஆச்சரியம் மிகுந்த இந்த நம்ப முடியாத தருணத்தை புகைப்படம் எடுத்து, சமூக ஊடகங்களுக்கு பகிர்ந்தனர் அவரது சிஷ்யர்களான துறவிகள்.

புதிய, சுத்தமான சவப்பெட்டிக்கு மாற்றுவதற்காக  மற்றத் துறவிகள் மூத்த துறவியின் உடலை அகற்றவே அதனை திறந்திருக்கிறார்கள். அப்போது பழைய சவப்பெட்டியில் காணப்பட்ட அவரது உடல் 36 மணி நேரத்திற்கு முன்பு இறந்த ஒருவரின் உடல் போலத்தான் இருந்திருக்கிறது. 

பியானின் அமைதியான புன்னகையுடன் கூடிய முகத்தைப் பார்த்ததும் அவர் பெளத்த மதத்தில் போதிக்கப்படும் நிர்வாண நிலையை அடைந்து விட்டதன் அடையாளம் அது என வியந்தனர் சீடர்கள். அவரது இறப்பின் 100-வது நாளில் இறுதி அஞ்சலி விழா நடைபெறும்வரை, துறவியின் சீடர்கள் அவருக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்வார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

பிபவ் குமார் விவகாரம்: தில்லி காவல் துறை பொய் கூறுவது ஏன்? ஆம் ஆத்மி

திரைக்கதிர்

சன் ரைசர்ஸுக்கு 215 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப் கிங்ஸ்!

பிரதமர் மோடி ஓய்வு பெற்றால் தான் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT