முகப்பு
உலகம்

2020ம் ஆண்டு அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன்: டொனால்டு ட்ரம்ப் தகவல் 

எதிர்வரும் 2020-ம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Updated On : 15 ஜூலை 2018, 2:07 pm IST
பகிர்:

நியூயார்க்: எதிர்வரும் 2020-ம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் மெயில் என்ற செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டிடில் தெரிவித்துள்ளதாவது:

எதிர்வரும் 2020ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடும் நோக்கத்தில் உள்ளேன்.  அனைவரும் நான் போட்டியிட வேண்டும் என விரும்புகின்றனர் என்பதுபோல்தான் தெரிகிறது.

Advertisement

Advertisement

ஜனநாயக கட்சியில் என்னைத் தோற்கடிக்க யாரும் இல்லை. அப்படி யாரையும் நான் பார்க்கவில்லை.  அவர்கள் அனைவரும் எனக்குத் தெரிந்தவர்கள்தான்.

'பிரெக்சிட்' பற்றி இங்கிலாந்து ராணி எலிசபெத்துடன் ஆலோசனை மேற்கொண்டேன். அது ஒரு சிக்கலான விசயம் என அவர் தெரிவித்தார். அது தொடர்பாக அவர் கூறியதுதான் சரி

இவ்வாறு அவர் தெரிவித்துளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments