சீன நிலக்கரிச் சுரங்கத்தில் வெடி விபத்து: 14 பேர் பலி
தென்மேற்கு சீனாவில் செயல்பட்டு வந்த நிலக்கரிச் சுரங்கத்தில் செவ்வாய்க்கிழமை திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்.
தென்மேற்கு சீனாவில் செயல்பட்டு வந்த நிலக்கரிச் சுரங்கத்தில் செவ்வாய்க்கிழமை திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்.
தென்மேற்கு சீனாவில் உள்ள குய்சௌ மாகாணத்தில் நடந்த இந்த விபத்தில் மேலும் இருவர் நிலக்கரிச் சுரங்கத்தில் சிக்கியிருப்பதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், வெடி விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இங்குள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்கனவே பலமுறை இதேபோன்று வெடி விபத்துக்கள் ஏற்பட்டு அதனால் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.