சீனத்தில் மீண்டும் பரவும் கரோனா
சீனத்தில் கரோனா வைரஸ் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது.
சீனாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு பரவ தொடங்கிய கரோனாவை, பெருந்தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அமல்படுத்தியதன் மூலம் அந்நாடு கட்டுக்குள் கொண்டு வந்தது.
இந்நிலையில், சீனத்தில் உள்ள ஐந்து மாகாணங்களில் தற்போது கரோனா மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. பல மாதங்களில் இல்லாத அளவுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அங்கு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு, சீனத்தின் வூஹானில் பரவிய கரோனா உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கியது. அதனை கட்டுப்படுத்து முடியாமல் உலக நாடுகள் திணறினாலும், தாங்கள் அதை கட்டுப்படுத்திவிட்டதாக சீனா அறிவித்தது.
Advertisement
Advertisement
இதற்கிடையே, ஜூலை 20ஆம் தேதி நாஞ்சிங் விமான நிலையத்தில் ஒன்பது பேருக்கு டெல்டா வகை கரோனா கண்டறியப்பட்டது. இதையடுத்து, நகரில் மொத்தமாக 184 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
நாடு முழவதும் பாதிக்கப்பட்டவர்களில் குறைந்துபட்சம் 206 பேர் நாஞ்சிங் விமான நிலையத்திலிருந்து பரவிய டெல்டா வகை கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தடுப்பு நடவடிக்கையாக ஜியாங்சு மாகாணத்தில் நூற்றுக்கணக்கான பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.