பிரேசில் அதிபருக்கு அனுமதி மறுத்த அமெரிக்க உணவு விடுதி
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத காரணத்தால் அமெரிக்காவில் உணவு விடுதிக்கு சென்ற பிரேசில் அதிபர் ஜேர் பொல்சனாரொவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத காரணத்தால் அமெரிக்காவில் உணவு விடுதிக்கு சென்ற பிரேசில் அதிபர் ஜேர் பொல்சனாரொவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபை கூட்டம் செப்டம்பர் 25ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பல்வேறு நாட்டுத் தலைவர்கள் நியூயார்க் நகரில் முகாமிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | கனடாவில் மூன்றாவது முறையாக பிரதமராகும் ஜஸ்டீன் ட்ரூடோ
Advertisement
Advertisement
ஐநா கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரேசில் அதிபர் ஜைர் போல்சனாரோ நியூயார்க் நகருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் உணவு விடுதிக்கு சென்ற பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு உணவு விடுதி நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.
பிரேசில் அதிபர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் கரோனா விதிமுறைகளின்படி அவர் அனுமதிக்கப்படவில்லை என உணவு விடுதி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. உணவு விடுதியில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பிரேசில் அதிபர் உணவு விடுதிக்கு வெளியில் நின்று உணவருந்தும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.