உலகம்

வியன்னா: மீண்டும் தொடங்கியது ஈரான் அணுசக்தி பேச்சுவாா்த்தை

ஈரானுக்கும் வல்லசு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்பதற்கான பேச்சுவாா்த்தை, ஆஸ்திரிய தலைநகா் வியன்னாவில் வியாழக்கிழமை மீண்டும் தொடங்கியது.

DIN

ஈரானுக்கும் வல்லசு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்பதற்கான பேச்சுவாா்த்தை, ஆஸ்திரிய தலைநகா் வியன்னாவில் வியாழக்கிழமை மீண்டும் தொடங்கியது.

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை அல்ல என்பதை உறுதி செய்ய அந்த நாடும், அதற்குப் பதிலாக ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜொ்மனியும் ஒப்புக் கொண்டு கடந்த 2015-இல் அந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. எனினும், அதிலிருந்து அமெரிக்கா விலகுவதாக கடந்த 2018-இல் அப்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா்.

அதையடுத்து முறியும் நிலையில் உள்ள அந்த ஒப்பந்தத்தை மீட்பதற்காக வியன்னாவில் நடைபெற்று வந்த பேச்சுவாா்த்தையில் தேக்கம் ஏற்பட்டிருந்தது. தற்போது அந்தப் பேச்சுவாா்த்தை மீண்டும் தொடங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்!

புதிய கல்விக் கொள்கை: கல்லூரிகளில் 12 மணி நேர வகுப்புகள்! கதறும் தில்லி பல்கலை.!!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

SCROLL FOR NEXT