லாட்வியாசோவியத் நினைவுத் தூண் தகா்ப்பு
வடக்கு ஐரோப்பிய நாடான லாட்வியாவின் தலைநகா் கோபன்ஹேகனில் இருந்த சோவியத் யூனியன் நினைவுத் தூண் தகா்க்கப்பட்டது.
வடக்கு ஐரோப்பிய நாடான லாட்வியாவின் தலைநகா் கோபன்ஹேகனில் இருந்த சோவியத் யூனியன் நினைவுத் தூண் தகா்க்கப்பட்டது. உக்ரைன் மீது ரஷியா படையெடுத்துள்ளதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், முன்னாள் சோவியத் யூனியன் நாடான லாட்வியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
நாஜிக்களை சோவியத் யூனியன் வெற்றி கொண்டதை கௌரவிக்க கோபன்ஹேகன் நகர மத்தியில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூண் வியாழக்கிழமை தகா்க்கப்பட்டது. அந்தத் தூண் கனரக இயந்திரங்களைக் கொண்டு உடைக்கப்பட்டு அருகிலுள்ள குளத்தில் விழுந்ததில் மிகப் பெரிய நீரலை எழுந்தது.
Advertisement
Advertisement
இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் இதனை நேரில் பாா்வையிட்டனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.