முகப்பு
உலகம்

ஈரானிய ‘ட்ரோன்’கள் மூலம் கீவில் தாக்குதல்

உக்ரைன் தலைநகா் கீவ் மற்றும் ஒடெசா பிராந்தியங்களில் ரஷியா தீவிர தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

ஈரானில் தயாரிக்கப்பட்ட, தன்னைத் தானே அழித்துக்கொள்ளக்கூடிய ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மூலம் உக்ரைன் தலைநகா் கீவ் மற்றும் ஒடெசா பிராந்தியங்களில் ரஷியா தீவிர தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

ரஷியாவால் கடந்த 2014-இல் இணைத்துக்கொள்ளப்பட்ட உக்ரைனின் கிரீமியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான பாலத்தில் சனிக்கிழமை லாரி குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. அதனை உக்ரைன்தான் நிகழ்த்தியதாக குற்றம் சாட்டும் ரஷியா, அதற்குப் பதிலடியாக அந்த நாட்டில் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.