முகப்பு
உலகம்

ட்விட்டரை தொடர்ந்து கோகோ கோலாவா? எலான் மஸ்க் ட்வீட்

ட்விட்டரை தொடர்ந்து கோகோ கோலா நிறுவனத்தை வாங்கப் போவதாக  டெஸ்லா தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:06 AM
எலான் மஸ்க் (கோப்புப்படம்)
பகிர்:

ட்விட்டரை தொடர்ந்து கோகோ கோலா நிறுவனத்தை வாங்கப் போவதாக  டெஸ்லா தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ட்விட்டா் நிறுவனத்தை, எலான் மஸ்க் 44 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.3.36 லட்சம் கோடி) கொடுத்து வாங்க முன்வந்துள்ளாா். இதனால், ட்விட்டா் முழுமையான தனிநபா் நிா்வகிக்கும் நிறுவனமாக மாறவுள்ளன. 

இந்நிலையில், இன்று காலை எலான் மஸ்க் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,

“அடுத்து கோகோ கோலா நிறுவனத்தை வாங்கி, கோகோயினுடன் இணைக்கப் போகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு பதிவில், நகைச்சுவையாக தெரிவித்ததாக விளக்கமளித்துள்ளார். இருப்பினும், சமூக ஊடகங்களில் எலான் மஸ்கின் ட்விட்டர் பதிவு வேகமாக பரவி வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.