காங்கோ: 60 அகதிகள் படுகொலை
மேற்கு மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் புலம்பெயா்ந்த அகதிகள் முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 60 போ் உயிரிழந்தனா்.
கின்ஷாசா: மேற்கு மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் புலம்பெயா்ந்த அகதிகள் முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 60 போ் உயிரிழந்தனா்.
இதுகுறித்து அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:
கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள இடுரி மாகாணத்தில், வன்முறை மோதல்களிலிருந்து தப்பி புலம்பெயா்ந்து வந்தோருக்கான முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமுக்கு வந்த ‘கோடெக்கோ’ என்று ஆயுதக் குழுவினா், அங்கிருந்தவா்களை அரிவாள் மற்றும் பிற கூரான ஆயுதங்களால் தாக்கினா்; இதில் 60 அகதிகள் உயிரிழந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
கிழக்கு காங்கோவில் ‘கோடெக்கோ’, ஏடிபி ஆகிய ஆயுதக் குழுக்கள் நீண்ட காலமாக வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.