பாகிஸ்தானில் அமைதிப் பேரணியில் வெடிகுண்டு தாக்குதல்: 17 ஆக உயர்ந்த பலி!
அமைதிப் பேரணியில் தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் நடைபெற்ற அமைதிப் பேரணியில் தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தான் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் சுவாத் பள்ளத்தாக்கில் உள்ள கபால் நகரில் இந்தத் தாக்குதல் நடைபெற்றது. உள்ளூர் பழங்குடியின அமைப்பான 'சுவாத் அமன் ஜிர்கா' சார்பில் இந்த அமைதிப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்கள், அந்தப் பகுதியில் சமீப காலங்களில் ஏற்பட்டுள்ள பாதுகாப்புக் குறைபாட்டிற்கு காவல்துறையின் செயலற்ற தன்மையே காரணம் என்று குற்றம் சாட்டி, அங்கு அமைதி நிலவ வேண்டும் என்று வலியுறுத்தும் விதமாக பதாகைகளை ஏந்தியும் முழக்கங்களை எழுப்பியும் அங்குள்ள காவல் நிலையம் அருகே பேரணியில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, அங்கு சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் அங்குள்ள காவல் நிலைய வளாகத்திற்குள் நுழைய முயன்றுள்ளார். ஆனால், காவலர்கள் அவரைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தான் வைத்திருந்த வெடிகுண்டை அந்த நபர் வெடிக்கச் செய்துள்ளார். இதனால், காவல் நிலைய வளாகம் சேதமடைந்ததுடன் காவலர்கள் 5 பேர் உள்பட 17 பேர் பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அப்பகுதி காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.