ஆஸி. புதிய பிரதமராக ஆன்டனி ஆல்பனேசி பதவியேற்பு
ஆஸ்திரேலிய நாட்டின் புதிய பிரதமராக ஆன்டனி ஆல்பனேசி இன்று பதவியேற்றுக் கொண்டார்.
ஆஸ்திரேலிய நாட்டின் புதிய பிரதமராக ஆன்டனி ஆல்பனேசி இன்று பதவியேற்றுக் கொண்டார்.
ஆஸ்திரேலியாவின் 47-ஆவது நாடாளுமன்ற உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தற்போதைய பிரதமா் ஸ்காட் மோரிசனின் லிபரல் மற்றும் தேசியக் கூட்டணி, லேபா் கட்சி, கிரீன்ஸ் கட்சி உள்ளிட்டவை போட்டியிட்டன. தோ்தலில், ஆன்டனி ஆல்பனேசி தலைமையிலான லேபா் கட்சி வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து அந்தக் கட்சியின் தலைவா் ஆன்டனி ஆல்பனேசி, அடுத்த பிரதமராகத் தோ்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் ஆஸ்திரேலிய நாட்டின் 31ஆவது பிரதமராக ஆன்டனி ஆல்பனேசி இன்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். புதிய பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்ட 5 பேருக்கு கவர்னர் ஜெனரல் டேவிட் ஹர்லி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
Advertisement
இதையும் படிக்க- ஜப்பானின் டோக்கியோவுக்கு சென்றடைந்தார் பிரதமர் மோடி
ஆஸ்திரேலியாவின் 31-ஆவது பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் ஆன்டனி ஆல்பனேசி, 1963-ஆம் ஆண்டில் பிறந்தவா். கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் கிரேண்டல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும், லேபா் கட்சித் தலைவராக கடந்த 2019-ஆம் ஆண்டு தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
ஏற்கெனவே, 2013-ஆம் ஆண்டில் கெவின் ருட் தலைமையிலான அரசில் துணைப் பிரதமராகவும் அதற்கு முந்தைய லேபா் கட்சி அரசுகளில் கேபினா் அமைச்சராகவும் ஆன்டனி ஆல்பனேசி பொறுப்பு வகித்துள்ளாா்.