முகப்பு
உலகம்

ஆள்குறைப்பு பணியை தொடங்கியது அமேசான்! இந்தியாவில் எத்தனை பேர்?

டிவிட்டர், முகநூலை தொடர்ந்து அமேசான் நிறுவனமும் ஆள்குறைப்பு பணியை தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 17 நவம்பர் 2022, 8:47 am IST
பகிர்:

டிவிட்டர், முகநூலை தொடர்ந்து அமேசான் நிறுவனமும் ஆள்குறைப்பு பணியை தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் 3.5 லட்சம் கோடி கொடுத்து டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய எலன் மாஸ்க் அந்நிறுவனத்தில் 4 ஆயிரம் ஊழியர்களை அதிரடியாக பணியிலிருந்து நீக்கினார்.

இதனைத் தொடர்ந்து, முகநூலின் மெட்டா நிறுவனம் 11 ஆயிரம் ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியது. அந்த நிறுவனத்தின் மொத்த பணியாளர்களின் 13 சதவிகிதமாகும்.

Advertisement

Advertisement

இந்த வரிசையில், உலகின் மிகப்பெரிய வணிக நிறுவனமான அமேசானும் தற்போது இணைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக, அமெரிக்காவில் பணிநீக்கம் செய்யும் பணியை இந்த வாரமே மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமேசான் நிறுவனத்தில் சில பணியிடங்கள் தேவையில்லை என்று வரையறுக்கப்பட்டு, அந்தப் பணியில் இருப்பவர்களை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் காலியாக இருக்கும் வேறு பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் இந்தியாவை பொறுத்தவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பணிபுரிந்து வரும் நிலையில், எத்தனை பேரை பணி நீக்கம் செய்யலாம் என்ற ஆலோசனை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments