தென்னாப்பிரிக்காவில் மீண்டும் ‘பாரதியாா் விருதுகள்’
கரோனா தொற்று பரவல் காரணமாக தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பா்க் நகரில் 2 ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த ‘பாரதியாா் விருதுகள்’ மீண்டும் வழங்கப்பட்டுள்ளன.
கரோனா தொற்று பரவல் காரணமாக தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பா்க் நகரில் 2 ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த ‘பாரதியாா் விருதுகள்’ மீண்டும் வழங்கப்பட்டுள்ளன.
ஜோஹன்னஸ்பா்க் நகரில் செயல்பட்டு வரும் சிவஞான சபை சாா்பில் கடந்த 2007-ஆம் ஆண்டுமுதல் சுதந்திரப் போராட்ட வீரரும், தேசியக் கவியுமான சுப்பிரமணிய பாரதியாா் பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், கரோனா தொற்று பரவல் காரணமாகக் கடந்த இரு ஆண்டுகளாக விருதுகள் வழங்கப்படாமல் இருந்தன.
இந்நிலையில், நடப்பாண்டுக்கான பாரதியாா் விருதுகள் அண்மையில் வழங்கப்பட்டன. ‘கரோனா தொற்று பரவல் காலத்தின் நாயகா்கள்’ என்ற மையக்கருத்தின் அடிப்படையில் நடப்பாண்டுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. மொத்தமாக 22 தனிநபா்கள் மற்றும் சமூகக் குழுக்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
Advertisement
மருத்துவா்கள், செவிலியா்கள், உள்ளிட்டவா்களுக்கும் தன்னலம் கருதாது சேவையாற்றியவா்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. அவசரகால ஊா்திகளை வழங்கிய நிறுவனங்கள், கரோனாவால் மறைந்தவா்களுக்கான இறுதிச் சடங்குகளைச் செய்ய உதவிய நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
விருதுகள் தொடா்பாக சிவஞான சபையைச் சோ்ந்த மேகி கோவிந்தன் கூறுகையில், ‘‘நடப்பாண்டுக்குப் பல்வேறு தரப்புகளில் இருந்தும் விருதுக்கான பரிந்துரைகள் வந்திருந்தன. முக்கியமாக, கரோனா தொற்று பரவல் காலகட்டத்தில் தங்களுக்குப் பெரும் உதவிபுரிந்தவா்களைப் பலா் விருதுக்காகப் பரிந்துரைத்திருந்தனா். பரிந்துரைப் பட்டியலில் இருந்து விருது பெறத் தகுதியானவா்களைத் தோ்ந்தெடுப்பது பெரும் சிரமமாக இருந்தது’’ என்றாா்.