முகப்பு
உலகம்

நேபாளத்தில் விமான விபத்து: இன்று அரசு துக்கம் அனுசரிப்பு

நேபாளத்தில் விமான விபத்தில் 67 பயணிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து இன்று அரசு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

Updated On : 16 ஜனவரி 2023, 6:10 am IST
நேபாள மலைப் பகுதியில் நொறுங்கிக் கிடந்த விமான பாகங்கள்.
பகிர்:

நேபாளத்தில் விமான விபத்தில் 67 பயணிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து இன்று அரசு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

காத்மாண்டுவின் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து காலை 10:33 மணிக்கு புறப்பட்ட எட்டி ஏர்லைன்ஸின் 9N-ANC ATR-72 விமானம் பொக்ரா விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, விமானம் ஓடு தளத்தில் இருந்து விலகி சென்றதால் தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 67 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

விமானத்தில் இருந்த 10 வெளிநாட்டவர்களில் ஐந்து இந்தியர்கள் அடங்குவதாக இந்திய தூதரகம் ட்விட் செய்துள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த ஐந்து இந்தியர்கள் அபிசேக் குஷ்வாஹா, பிஷால் சர்மா, அனில் குமார் ராஜ்பர், சோனு ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சயா ஜெய்ஸ்வால் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக எட்டி ஏர்லைன்ஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

இந்நிலையில் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக நேபாளத்தில் இன்று ஒருநாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.