கடற்கன்னிகள் உண்மையா? ஆஸி.யில் அரியவகை எலும்புகள்!!
ஆஸ்திரேலியா கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ள எலும்புக்கூடால், கடல் கன்னிகள் உண்மைதானோ என்ற சந்தேகம் அனைவருக்குள்ளும் எழுந்துள்ளது.
ஆஸ்திரேலியா கடற்கரையில் கடற்கன்னி வடிவிலான எலும்புக் கூடு கண்டறியப்பட்டுள்ளது. இதனால், கடற்கன்னிகள் உண்மைதானோ என்ற சந்தேகம் பலரிடையே எழுந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேன்ட் பகுதியிலுள்ள கேப்பல் சான்ட்ஸ் என்ற கடற்கரையில் எலும்புக்கூடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
மனித முகமும், மீன் உடலையும் போன்று அந்த எலும்புக்கூடு இருந்துள்ளது. இதைப் புகைப்படம் எடுத்து, போபி லீ என்ற 34 வயது பெண் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, மண்டை ஓடு மனித முகத்தைப்போன்று உள்ளது. மீன் உடல் போன்று உடலின் எலும்புகள் உள்ளன. இது எந்தவகையான உயிரினம் எனக் கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
இது கடற்கன்னி என்றும், நீங்கள் கடற்கன்னி எலும்புக்கூடை படமெடுத்துள்ளீர்கள் என்றும் அந்த புகைப்படத்துக்கு பலர் கருத்துதெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.