அரபு நாட்டில் உயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து
ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான அஜ்மான் நகரில் அமைந்துள்ள மிக உயரமான அடுக்குமாடிக் குடியிருப்பில், திங்கள்கிழமை நள்ளிரவில் மிகப் பயங்கர தீ விபத்து நேரிட்டது.
ஐக்கிய அரபு நாடுகளிலுள்ள அஜ்மான் நகரில் மிக உயரமான அடுக்குமாடிக் குடியிருப்பில், திங்கள்கிழமை நள்ளிரவில் மிகப் பயங்கர தீ விபத்து நேரிட்டது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பல வாகனங்களில் விரைந்துச் சென்ற தீயணைப்பு வீரர்கள், பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
அஜ்மன் ஒன் காம்ப்ளக்ஸ் என்ற குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள இரண்டாவது கட்டடத்தில் இந்த விபத்து நேரிட்டதாக அஜ்மான் காவல்துறை தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை, கட்டடத்தின் ஒரு மூலையில் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்த விடியோவை அஜ்மான் காவல்துறை வெளியிட்டிருக்கிறது.
உடனடியாக, நடமாடும் காவல்துறை வாகனம், தீ விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்து, தீ விபத்தில் பாதிப்புக்குள்ளான விவரங்களை பதிவு செய்ய வழிவகை ஏற்படுத்திக்கொடுத்தனர்.
ஐக்கிய அரபு நகரங்களில் அண்மைக்காலமாக உயரமான அடுக்குமாடிக் குடியிருப்புகளில் தீ விபத்துகள் அதிகரித்து வருவது குறித்து உள்கட்டமைப்பு அமைச்சகம் புள்ளிவிவரத்தோடு கவலை தெரிவித்திருந்த மூன்றாவது நாளில் இந்த தீ விபத்து நேரிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.